எந்த கட்சியுடனும் இணைந்து செயற்பட தயார் – பிரதமர்

4823 0

1நாட்டின் நலன்கருதி அரசாங்கம், எந்தக்கட்சியுடனும் இணைந்து செயற்பட தயாராக இருக்கிறது என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்புரிமையை அதிகரிக்கும் நோக்கில் பதுளையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய அவர் இந்தக்கருத்தை வெளியிட்டார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அல்லது ஜேவிபி என்று எந்தக்கட்சி முன்வந்தாலும் அந்தக்கட்சிகளுடன் இணைந்து செயற்பட அரசாங்கம் தயாராக உள்ளது.
மற்றவர்கள் அனைவரும் எதிர்ப்பை வெளியிடும்போது அரசாங்கம் மாத்திரமே திட்டங்களை நடைமுறைப்படுத்தவேண்டிய நிலை ஏற்படுகிறது.
இதனை தவிர்க்கவே தேசிய அரசாங்கம் ஒன்று உருவாக்கப்பட்டது.
இதன்அடிப்படையிலேயே ஐக்கிய தேசியக்கட்சியின் ஹரின் பெர்ணான்டோவும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நிமால் ஸ்ரீபால டி சில்வாவும் ஒரே அமைச்சரவையில் அங்கம் வகிக்கமுடிந்திருக்கிறது என்று ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டார்.

Leave a comment