உண்ணா நோன்பிருந்து உயிர்நீர்த்த தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் 8 ஆவது நாள் இன்று யேர்மனியிலுள்ள கொற்றிங்கன் நகரில் நினைவுகூரப்பட்டது.

1077 0

இந்திய வல்லாதிக்கத்திடம் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீர் கூட அருந்தாது உண்ணாநோன்பிருந்த தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் எட்டாவது நாள் இன்று யேர்மனி கொற்றிங்கன் நகரத்தில் எழுச்சியுடன் நினைவுகூரப்பட்டது.

ஈழத்தில் நினைவு கூறல் நிகழ்வுகளுக்கு சிங்கள பெளத்த பேரினவாதம் தடை விதித்ததன் பின்னனியில் இந் நிகழ்வானது தியாக தீபம் திலீபன் அவர்கள் உண்ணா நோன்பை ஆரம்பித்த புரட்டாதி மாதம் 15 ஆம் திகதியில் இருந்து தொடர்ச்சியாக யேர்மனியின் முக்கிய நகரமத்தியில் நினைவுகூரப்படுகின்றது. அந்த வகையிலே 8 ஆவது நாளான இன்று கொற்றிங்கன் நகரத்தில் நினைவு கூரப்பட்டது.

ஒன்பதாவது நாளான நாளையதினம் யேர்மனி Osnabrück நகரமத்தியில் நடைபெறவிருக்கின்றது. அந்த நகரத்தில் வாழும் தமிழ் மக்களை தியாகதீபத்திற்கு மலர்துர்வி சுடர் ஏற்ற அழைக்கின்றோம்.