கோப் குழுவின் தலைவராக சரித ஹேரத் நியமனம்

250 0

9 ஆவது பாராமன்றத்தில் கோப் குழுவின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார்.

அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் அரசாங்கத்தின் கீழியங்கும் பிற நிறுவனங்களின் நிதி நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கான அதிகாரம் கோப் குழுவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஆகஸ்ட் 27 அன்று சமர்ப்பிக்கப்பட்ட ஒரு முன்மொழிவு பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட பின்னர் 22 உறுப்பினர்களைக் கொண்ட கோப் குழு நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.