வவுனியாவில் கிணற்றுக்குள் வீழ்ந்து தவித்த முதலையும் 12 குட்டிகளும் மீட்பு!

212 0

வவுனியாவில் நீர்நிலைகளைத் தேடி கிணற்றுக்குள் வீழ்ந்து தவித்த தாய் முதலையும் 12 குட்டிகளும் பத்திரமாக மீட்கப்பட்டு காட்டுப் பகுதிக்குள் விடுவிக்கப்பட்டன.

தற்போது நிலவும் வறண்ட வானிலை காரணமாக நீர் நிலைகளைத் தேடியலைந்த நிலையில் குறித்த பன்னிரெண்டு குட்டி முதலைகளும் தாய் முதலையும் வவுனியா, குருந்துபிட்டி பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் வீழ்ந்துள்ளன.

இந்நிலையில், இன்று (சனிக்கிழமை) காலை காணி உரிமையாளர், தோட்டத்திலுள்ள கிணற்றை சுத்தம் செய்வதற்காக சென்ற நிலையில் அதில் முதலை இருப்பதைக் கண்டார். இதையடுத்து அப்பகுதி மக்களின் உதவியுடன் முதலைகள் மீட்கப்பட்டன.

வறட்சியான காலநிலையால் குருந்துபிட்டிய குளம் மற்றும் நீர் நிலைகள் வற்றிக் காணப்படுவதனால் முதலைகள் அங்கிருந்து வெளியேறி நீர்நிலைகளைத் தேடுவதாக அப்பகுதியில் வசிப்பவர்கள் தெரிவித்தனர்.