புதிய செம்மணி வீதி வீடு ஒன்றில் கொள்ளை!

225 0

யாழ்ப்பாணம் – கல்வியங்காடு புதிய செம்மணி வீதி வீடு ஒன்றில் கோம் தியேட்டர் சிஸ்டம் உள்ளிட்டவை திருட்டுப் போயுள்ளதாக வீட்டு உரிமையாளரால் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் நேற்று (17) மாலை இடம்பெற்றுள்ளது. வீட்டின் உரிமையாளர் வீட்டில் இல்லாத சமயத்தில் ஜன்னல் கதவால் மரக்கட்டையை கொண்டு வீட்டின் பிரதான வாசல் கதவு மறிப்பு கட்டையை களற்றி வீட்டினுள் உட்புகுந்து அறைகள் அனைத்திலும் திருடர்கள் தமது கைவரிசையை காட்டியதோடு அறையில் இருந்த பெறுமதிமிக்க கோம் தியேட்டர் சிஸ்டம் மற்றும் சிடி பிளேயர் போன்றவற்றை திருடிச்சென்றுள்ளார்கள்.

கோப்பாய் குற்றத்தடுப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.