20 ஆவது திருத்தம் தொடர்பில் நாம் பின்வாங்கப்போவதில்லை – கெஹெலிய

390 0

20 ஆவது அரசியல் யாப்பு திருத்த சட்ட மூல த்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் திகதி அடுத்து நடைபெறவுள்ள கட்சி தலைவர்களின் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் என வெகுஜன ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “ஜனநாயக ரீதியிலும், வெளிப்படைத் தன்மையுடனும் நாடாளுமன்றத்தில் 20 ஆவது அரசியல் யாப்பு திருத்த சட்ட மூலம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

குழுவின் அறிக்கை குறித்து கலந்துரையாடப்பட்டது. இந்த குழு பிரதமரினால் நியமிக்கப்பட்டுள்ளது.

இதில் அரசியல் பிரச்சினைகள் பல இருக்கக்கூடும். அரசியல் சம்பந்தமான விடயங்கள் இருக்குமாயின் அது குறித்தும் கலந்துரையாடப்படும்.

திருத்தம் தொடர்பில் நாம் பின்வாங்கப்போவதில்லை’ எனக் குறிப்பிட்டுள்ளார்.