20வது திருத்தத்துக்கு எதிராக நீதிமன்றம் செல்வதா என்பது குறித்து இந்த வாரம் தீர்மானம்

203 0

20வது திருத்தத்துக்கு எதிராக நீதிமன்றம் செல்வதா என்பது குறித்து இந்த வாரம் தீர்மானிக்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன்பெர்ணான்டோ இதனை தெரிவித்துள்ளார்.
கட்சியின் சட்டகுழுவொன்று இது குறித்து ஆராய்ந்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எங்கள் குழுவினர் இது குறித்து ஆராய்ந்துவருகின்றனர் இது குறித்து கட்சியின் நாடாளுமன்ற குழு ஆராயும் என அவர் தெரிவித்துள்ளார்.

நீதித்துறையிடம் செல்வதே ஒரேவழியாக காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார். ஏனைய சாத்தியப்பாடுகள் குறித்து ஆராய்ந்துவருகி;ன்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.