சிறிலங்காவில் மேலும் 12 பேருக்கு கொரோனா தொற்று

378 0

சிறிலங்காவில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 971 ஆக அதிகரித்துள்ளது.

இன்று இதுவரையான கலப்பகுதியில் மேலும் 12 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இவர்கள் அனைவரும் இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய நிலையில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 05 பேர் குணமடைந்துள்ள நிலையில் தொற்றில் இருந்தும் பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 816 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 143 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை 58 பேர் தற்போது சந்தேகத்தின் அடிப்படையில் தொடர்ந்தும் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ள நிலையில் 12 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.