140 மில்லியன் ரூபாய் பரிமாற்றப்பட்ட 7 வங்கிப் புத்தகங்களுடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாரியளவில் போதை வர்த்தகத்தில் ஈடுபட்டு, தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அத்திட்டிய மேர்வின் ஜனாவின் சகோதரியே இவ்வாறு பொரலஸ்கமுவ பிரதேசத்தில் வைத்து நேற்று (24) கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அத்துடன் போதைப்பொருள் வர்த்தகத்தில் சம்பாதித்ததாக நம்பப்படும் அதிசொகுசு காரொன்றும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மேர்வின் ஜனாவின் போதை வர்த்தக்தை குறித்த பெண்ணே முன்னெடுத்து வந்துள்ளமை விசாரணைகளில் மூலம் தெரியவந்துள்ளது.