செஞ்சோலை சிறுவர் இல்லத்தில் உயிரிழந்த உறவுகளுக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் அஞ்சலி

402 0

முல்லைத்தீவு வன்னிபுனம் செஞ்சோலை சிறுவர் இல்லத்தில் இலங்கை விமானப் படையினர் மேற்கொண்ட விமானக் குண்டுத் தாக்குதலில் உயிரிழந்த உறவுகளுக்கு இன்று யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் முன்பாக அமைந்துள்ள உலகத் தமிழர் பண்பாட்டு இயக்க வளாகத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் அஞ்சலி செலுத்தப்பட்டது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் நடைபெற்ற நினைவஞ்சலி யில் கட்சியின் செயலாளர் மற்றும் கட்சியின் ஆதரவாளர்கள் இணைந்து அஞ்சலி செலுத்தினர்.

முதலில் நினைவுச் சுடரினை கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஏற்றி வைத்தார்.அதன் பின்னர் கட்சி ஆதரவாளர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.

முல்லைத்தீவு வன்னி புணம் செஞ்சோலை சிறுவர் இல்லத்தில் கடந்த 2006ம் ஆண்டு விமானப் படையினர் மேற்கொண்ட விமான குண்டுத் தாக்குதலில் 54 பள்ளிச் சிறுமிகள் உட்பட 61 பேர் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.