சிறிலங்காவில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!

201 0

சிறிலங்காவில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இவ்வாறு தொற்று கண்டறியப்பட்டவர் எகிப்தில் இருந்து இலங்கைக்கு வருகை தந்த இந்திய சீ மார்ஷல் ஒருவர் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், நாட்டில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை இரண்டாயிரத்து 881 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, இதுவரையில் இரண்டாயிரத்து 638 பேர் பூரணமாக குணமடைந்துள்ள நிலையில், தற்போது 232 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

அத்துடன், நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.