சிரியாவில் நடக்கும் போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டுமென அந்நாட்டின் சிறுமி ஒருவர் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார். சிரியாவில் அரசுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நடக்கும் உள்நாட்டு போரில் அப்பாவி மக்கள் கொல்லப்படுகின்றனர். பலர் பக்கத்து நாடுகளுக்கு அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர். சிலர் மட்டும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். இவர்கள் ஒவ்வொரு நாளும் மரண பயத்தில் வாழ்கின்றனர். இதை இங்குள்ள 7 வயது சிறுமியான பானா அலாபத், உலகிற்கு சமூகவலைதளமான ‘டுவிட்டர்’ மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.
ஹாரி பாட்டர் புத்தகம் : இவரது தாயார்தான் ‘டுவிட்டர்’ கணக்கை பராமரித்து வருகிறார். சமீபத்தில், ‘எனது மகளுக்கு ‘ஹாரி பாட்டர்’ திரைப்படம் பிடிக்கும். ஆனால், பார்க்க வாய்ப்பு இல்லை,’ என பதிவிட்டிருந்தார். உடனடியாக, இதன் ஆசிரியர் ஜே.கே. ரவ்லிங் ‘இ-புத்தகத்தை’ அனுப்பி வைத்தார்.
வேண்டாம் போர் : போரின் போது குண்டு மழைக்கு பயந்து படுக்கைக்கு கீழே ஒளிந்து கொள்ளும் ‘வீடியோவை’ சமீபத்தில் ‘டுவிட்டரில்’ வெளியிட்டார் பானா. ‘இன்னும் நாங்கள் உயிருடன்தான் உள்ளோம். தயவு செய்து குண்டு வீசுவதை நிறுத்துங்கள். எங்கள் பகுதியை காப்பாற்றுங்கள்,’ என்ற வாசகங்கள் அடங்கிய தனது படத்தை வெளியிட்டு உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளார். இந்த சிறுமியின் கெஞ்சல் பலரின் மனதை உருக்குவதாக அமைந்துள்ளது.
ஆசிரியர் தலையங்கம்
-
ஜேர்மன் ஒற்றுமை தின வரவேற்பு நிகழ்வில் சஜித் பிரேமதாச பங்கேற்பு
October 3, 2025 -
நீதிக்கெதிரான மொழிச் சதி!
October 3, 2025
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
மன்னார் மக்களின் வாழ்வாதாரப்போராட்டம்
October 7, 2025 -
ஏமாற்றப்பட்ட தேசத்தின் கண்ணீர்: ஈழத் தமிழர்களின் அரசியல் பயணம்
September 27, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
மாவீரர் நினைவு சுமந்த உள்ளரங்க உதைபந்தாட்டுப் போட்டி -சுவிஸ்,30.11.2025
November 20, 2025 -
தமிழ்த்திறன் போட்டி 2025- யேர்மனி
November 17, 2025

