முருகன் சிலையை கடத்தி விற்பனை செய்ய முயற்சித்த பொலிஸ் உத்தியோகத்தர் கைது

412 0

திருகோணமலை இருந்து மட்டக்களப்பிற்கு சட்டவிரோதமாக முருகன் சிலை ஒன்றை கடத்தி சென்று விற்பனை செய்ய முயற்சித்த பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவரை கைதுசெய்துள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய நேற்று திங்கட்கிழமை இரவு திருகோணமலையில் இருந்து மட்டக்களப்பிற்கு சட்டவிரோதமாக ஜம்பொன் முருகன் சிலையை கடத்தி சென்று விற்க முயன்றபோதே குறித்த பொலிஸ் உத்தியோகஸ்தரை ; பொலிசார் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் குறித்த நபர் பொலிஸ் உத்தியோகத்தில் இருந்து இடைநிறுத்திய திருகோணமலை முள்ளிப்பொத்தானையைச் சேர்ந்த 54 வயதுடையவர் எனவும். புதையலில் இருந்து கிடைத்த சிலை எனவும் அதனை ஒரு நண்பர் தந்தாகவும் இதனை விற்பதற்காக மட்டக்களப்பிற்கு வந்ததாகவும் தெரிவித்ததாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது

இதையடுத்து கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.