பொதுமக்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும்!- மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் வேண்டுகோள்

341 0

நடைபெறவிருக்கும் பொதுத்தேர்தலில் பொதுமக்கள் எவ்வளவு கஸ்டம் இருந்தாலும் அனைவரும் நேரமொதுக்கி தமது ஜனநாயக உரிமையான வாக்களிப்பில் ஈடுபடவேண்டுமென மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் கலாநிதி பொன்னையா ஜோசப் மட்டக்களப்பு ஆயர் இல்லத்தில் நேற்று (31) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டார்.

ஆயர் பொன்னையா ஜோசப் மேலும் கருத்து தெரிவிக்கையில் நான் அரசியல் சார்பற்றவன். எந்த அரசியல் கட்சிகளையும் சாராதவன். அரசியலுக்குப்பால் எல்லா மதங்களுக்கும் பொதுவாகவே சேவை புரிந்து வருகின்றேன். வாக்களிப்பது மனித உரிமை அது எமது கடமையுமாகும். சிறையிலிருப்பவர்களுக்கும் வாக்களிக்கும் உரிமையினை அரசு வழங்கவேண்டும் என கோரிக்கை விடுத்தவன். மட்டக்களப்பு மாவட்டத்தில் பலர் சிரமத்தில் வாக்களிப்பதில்லை. பலரது வாக்குகள் நிராகரிக்கப்படுபவையாக ஆக்கப்படுகின்றது. இவற்றை நன்றாகக் கவனித்து வாக்களிக்க வேண்டும் என பொதுமக்களைக கேட்டுக் கொண்டார்.

பொதுமக்கள் நன்றாக சிந்தித்து பொருத்தமானவர்களை நீங்களே தெரிவு செய்யவேண்டும். எவ்வளவு கஸ்டமான வேலைகள் இருந்தாலும் நீங்கள் அனைவரும் கட்டாயம் நேரமொதுக்கி வாக்களிக்வேண்டும். நான் சிவில் சமுகத்தின் போசகராக செயற்பட்டு வருகின்றேன். இனவாதம், மதவாதம், மொழி வாதம் இருக்கக்கூடாது. அதனைத் தவிர்க்கவேண்டும். வேட்பாளர்கள் வன்முறைகளைத் தவிர்த்துக் கொள்ளவேண்டும் எனவும் இதனை ஊடகங்கள் மக்களிடையே கொண்டு செல்லவேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

இதன்போது மேலும் கருத் தெரிவித்த சிவில் சமுக குழுவின் தலைவர் எஸ். மாமாங்கராஜா கருத்து தெரிவிக்கையில் கடந்த காலங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வாக்களிப்பு வீதம் மிகவும் குறைவாகவே காணப்பட்டது. கிராமப் புறங்களில் உள்ள மக்கள் வாக்களிப்பதில் காட்டும் ஆர்வத்தைப்போல் நகர் புறங்களில் வாழ்பவர்கள் வாக்களிப்பில் ஆர்வம் காட்டுவதில்லை. இதற்குக் காரணம் கடந்த யுத்தகாலம் வாக்களிப்பதில் விருப்பமின்மையை ஏற்படுத்தியிருக்கலாம்.

தற்பொழுது வாக்களிக்கச் சென்றால் கொரோனா தொற்று ஏற்படும் என பொய் வாந்தி பரப்பப்பட்டுள்ளது. இம்மாவட்டத்தில் எந்த ஒரு தனி நபரும் கோரோனா நோயினால் பாதிக்கப்படவில்லை. மட்டக்களப்பில் கொரோனா கண்டறிபய்பட்ட ஒருவர் வெளிநாட்டில் இருந்து வந்தவர். அவரும் பூரண குணமடைந்து விட்டார். எனவே மக்கள் எவ்வித பயமோ, பீதியோ இன்றி அனைவரும் வாக்களிக்க வேண்டும். கடந்த காலத்தைவிட 80 தொடக்கம் 85 வீதம் வாக்களிக்க வேண்டும்.

மக்கள் ஜனநாயக உரிமையினைப் பயன்படுத்தி உங்களுக்கு விருப்பமான பொருத்தமான தகுதியான நல்லவரைத் தெரிவு செய்யுங்கள் என மாமாங்கராஜா பொதுமக்களைக் கேட்டுக்கொண்டார். இவ்வூடகவியலாளர் சந்திப்பில் சிவில் சமுக குழுவின் உறுப்பினர் எஸ். தவபாலரட்னம் மற்றும் ஊடகவியலாளர்கள் பலரும் பிரசன்னமாயிருந்தனர்.