யாழ். நாவலர் வீதியிலுள்ள வீட்டின் மீது பெற்றோல் குண்டு வீச்சு

317 0

யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் உள்ளவீடொன்றின் மீது நேற்று மாலை பெற்றோல் குண்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இனம் தெரியாத மர்மக் கும்பல் ஒன்று பெற்றோல் குண்டுத் தாக்குதலை மேற்கொண்டு விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இந்தத் தாக்குதலில் வீட்டில் தரித்து நின்ற காருக்குச் சேதம் ஏற்பட்டுள்ளதுடன் வீட்டின் சில பகுதிகளும் சேதமடைந்துள்ளன.

தாக்குதலை நடத்திய மர்ம நபர்கள் யார் என்பது குறித்து யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.