அரசுகள் உறுதியான நடவடிக்கை எடுக்காவிட்டால், கொரோனா வைரஸ் தொற்று நிலைமை இன்னும் மோசமாகும் என்ற உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் எச்சரிக்கை விடுத்தார்.
சீனாவில் கடந்த டிசம்பர் மாதம் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று இந்த 7 மாதங்களில் உலக நாடுகளையெல்லாம் தன் பிடியில் ஆட்டுவித்து வருகிறது. இந்த வைரஸ் தொற்றின் வீரியத்தை கணிக்க முடியாமல் உலகளவில் விஞ்ஞானிகள் கைகளை பிசைந்து கொண்டிருக்கிறார்கள்.