சிறிலங்காவில் மேலும் ஐவருக்கு கொரோனா வைரஸ் தொற்று!

246 0

சிறிலங்காவில்  மேலும் ஐந்து பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் மொத்த எண்ணிக்கை இரண்டாயிரத்து 464ஆக அதிகரித்துள்ளது.

இவ்வாறு தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களில் இருவர் வெலிகந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் ஏனைய மூவரும் ஹபராதுவ, ராஜாங்கனை மற்றும் லங்கபுர ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

குறித்த ஐவரும் கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டவர்களில் 1980 பேர் இதுவரை பூரணமாக குணமடைந்துள்ளனர்.

இந்நிலையில், தற்போது 473 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருவதுடன் இதுவரை 11 பேர் மரணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.