சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரமவிற்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் இன்று முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
கூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் இந்த முறைப்பாட்டை செய்துள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
தற்போதைய அரசாங்கத்தின் ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அமைச்சர்களின் பட்டியலில் என குறிப்பிடப்படும் டொப் டேன் பட்டியலில் மூன்றாவது நபர் இவர் என கூட்டு எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.
மாபொல நிதியத்திலுள்ள 1000 மில்லியன் ரூபா நிதியை ஊழல் செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே கூட்டு எதிர்க்கட்சி லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் இன்று முறைப்பாடு செய்துள்ளது.