சிரியாவில் லில் 6 ஈரானிய போராளிகள் உயிரிழப்பு

245 0

சிரியா – ஈரான் எல்லைக்கு அருகே நேற்று (சனிக்கிழமை) இரவு நடத்தப்பட்ட இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் 06 போராளிகள் உயிரிழந்துள்ளனர்.

ஈராக் எல்லைக்கு அருகிலுள்ள அல் புகாமால் பகுதியில் அசாத் ஆட்சி மற்றும் ஈரானிய சார்பு போராளிகளுக்கு சொந்தமான தளங்களில் தாக்குதல் நடத்தப்பட்டது என போரினால் பாதிக்கப்பட்ட நாட்டில் சிரிய ஜனாதிபதி பஷர் அசாத்தின் ஆட்சியை எதிர்க்கும் சக்திகளுடன் இணைந்திருக்கும் மனித உரிமைகளுக்கான சிரியா ஆய்வகம் தெரிவித்துள்ளது.

இந்தத் தாக்குதலை யார் நடத்தினார்கள் என்ற தகவல் இதுவரை வெளியாகாத நிலையில் கொல்லப்பட்டவர்களில் நான்கு பேர் சிரிய நாட்டவர்கள் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் சிரியாவில் இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் ஒன்றை நடத்தியதாகவும் இந்நிலையிலேயே ஈரான் ஆதரவு தீவிரவாதிகள் மீது தாக்குதல் மேற்கொள்ளபட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

சிரியாவில் ஐ.எஸ். அமைப்பினரின் கட்டுப்பாட்டில் இருந்த பல்வேறு பகுதிகள் அரசு கூட்டுப் படைகளால் மீட்கப்பட்டுள்ள நிலையில், கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில்  உள்ள சில இடங்களில் தாக்குதல் சம்பவங்கள் அவ்வப்போது நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.