சிறிலங்காவில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!

253 0

சிறிலங்காவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 2010 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 3 பேர் இன்று (வியாழக்கிழமை) மாலை அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு தொற்றுக்குள்ளான மூவரும் கடற்படையின் தளபதிகள் எனவும் இவர்கள் பூசா தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தலில் இருந்தவர்கள் என்றும் அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மேலும் 40 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து இன்று வெளியேறியுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்து 602 ஆக அதிகரித்துள்ளதுடன் தொற்றுக்கு உள்ளான 397 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

மேலும் நாட்டில் இந்த வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி 11 பேர் இதுவரையில் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.