விரைவில் தயாராகிறது ஜேர்மனின் கொரோனா தடுப்பூசி

247 0

ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த க்யூர்வேக் ( CureVac )என்ற நிறுவனம் கொரோனா சிகிச்சைக்கான தடுப்பூசியை உருவாக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

இது, பங்குச்சந்தையில் பட்டியலிடப்படாத நிறுவனம் ஆகும்.

டியுபிங்கன் பல்கலைக்கழக வைத்தியசாலையைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் பீட்டர் கிரம்ஸ்னர் தலைமையில் இந்த ஆராய்ச்சி இடம்பெற்று வருகின்றது.

இந்த தடுப்பூசியை உருவாக்கும் பணி இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது.

இதை முதலில் பரிசோதித்து பார்ப்பதற்காக, ஜேர்மன் மற்றும் பெல்ஜியத்தில் மொத்தம் 144 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இன்னும் 2 மாதங்களில் அவர்களிடம் பரிசோதனை நடத்தப்பட்டு, முடிவுகள் வெளியிடப்படும்.

பீட்டர் கிரம்ஸ்னர் கூறியதாக இந்த தகவலை ஜேர்மன் நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

பரிசோதனைக்குப் பின்னர் அடுத்த ஆண்டில் இந்த தடுப்பூசிக்கு அங்கீகாரம் கிடைக்கும் என்று பீட்டர் கிரம்ஸ்னர் நம்பிக்கை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.