குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் கருணா

232 0

வாக்குமூலம் பதிவு செய்வதற்காக விநாயகமூர்த்தி முரளிதரன், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் இன்று (23) ஆஜராகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர் தெரிவித்த கருத்து தொடர்பில் உடனடியாக விசாரணையை ஆரம்பிக்குமாறு பதில் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன, குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு நேற்று பணிப்புரை விடுத்திருந்தார்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உறுப்பினராக செயற்பட்ட காலத்தில் கருணா அம்மான் மேற்கொண்டதாக கூறப்படும் குற்றச் செயல்கள் தொடர்பில் அண்மையில் அவர் வௌியிட்ட கருத்து குறித்து விசாரணைகளை ஆரம்பிக்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன கூறியுள்ளார்.