பளையில் இரண்டரை கிலோ சி-4 வெடிமருந்து மீட்பு – திருட முயற்சித்த போது சம்பவம்

234 0

கிளிநொச்சி – பளை பகுதியில் இரண்டரை கிலோ எடையுள்ள சி-4 வெடிமருந்து இன்று (22) அதிகாலை இராணுவத்தினரால் மீட்கப்பட்டுள்ளது.

பளை பகுதியில் உள்ள மிதிவெடி அகற்றும் நிறுவனத்திற்குள் புகுந்த இரண்டு சந்தேக நபர்கள் அங்கு இருந்த வெடி மருந்துகளை திருடிக் கொண்டு வெளியில் வந்தபோது நிறுவனத்தின் காவலாளி கண்டதால் குறித்த வெடிமருந்து மூட்டையைப் போட்டு விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் பளை பொலிஸாருக்கும் இராணுவத்துக்கும் தகவல் வழங்கப்பட்டது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த இராணுவத்தினர் குறித்த மூட்டைக்குள் இருந்த இரண்டரை கிலோ சி-4 வெடிமருந்தை மீட்டுள்ளனர்.

மேலும் குறித்த இரு சந்தேக நபர்களையும் தேடும் நடவடிக்கையை இராணுவம் மற்றும் பொலிஸார் இணைந்து முன்னெடுத்து வருகின்றனர்.