முன்னிலை சோஷலிஸக் கட்சியுடன் இணையத் தயார்- அனுரகுமார

268 0

ஜனநாயகத்திற்கான போராட்டத்தின் போது முன்னிலை சோஷலிஸக் கட்சியுடன் இணைந்து பணியாற்றத் தனது கட்சி தயார் என கட்சி மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

முன்னிலை சோஷலிஸக் கட்சி தேசிய சக்தியின் பங்குதாரர்களுக்கு வழங்கத் தயாராக இருந்தால், வரவேற்கத்தக்கது என அவர் மேலும் தெரிவித்தார்.

அத்தோடு, கடந்த கால அரசியல் நிகழ்வுகளை மறந்து அவர்களுடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

எனவே, நாட்டில் வென்றெடுக்க வேண்டியுள்ள விடயங்களுக்காகத் தேசிய ரீதியில் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்