மாங்குளம் பகுதியில் விபத்தில் முதியவர் பலி!

241 0

முல்லைத்தீவு – மாங்குளம் பகுதியில் கடந்த 12ம் திகதி இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்திருந்த முதியவர் சிகிச்சை பலனின்றி இன்று (16) உயிரிழந்துள்ளார்.

குறித்த முதியவர் மாங்குளம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது மாடுடன் மோதியதில் விபத்துக்குள்ளானார்.

விபத்தில் காயமடைந்தவர் உடனடியாக மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

இருப்பினும் சிகிச்சை பலனின்றி இராசையா தியாகராயா (வயது64) என்ற முதியவர் மரணமடைந்துள்ளார்.