6 கிலோ ஹெரோயினுடன் நபர் ஒருவர் கைது

255 0

நீர்கொழும்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் 6 கிலோ ஹெரோயினுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (15) இரவு 9.40 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது சந்தேக நபரிடம் இருந்து 6 கிலோ 137 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கட்டுநாயக்க பகுதியை சேர்ந்த 45 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.