தமிழகத்தில் இன்று 1843 பேருக்கு கொரோனா: இதுவரை இல்லாத அளவிற்கு 44 பேர் பலி

315 0

தமிழகத்தில் இன்று 1843 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை இல்லாத அளவிற்கு 44 பேர் உயிரிழந்துள்ளனர்.

44 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1843 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இன்று வரை தமிழகத்தில் மொத்தம் 46,504 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதேவேளையில் இன்று இதுவரை இல்லாத அளவிற்கு 44 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பலியானோர் எண்ணிக்கை 479 ஆக அதிகரித்துள்ளது. இன்று தனியார் மருத்துவமனையில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

இன்று 797 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் இதுவரை 25,344 பேர் குணமடைந்துள்ளனர்.

இன்று 18,403 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை 7,29,002 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.