எகிப்து நாட்டில் மத பிரமுகர்கள் 2 பேரின் தலை துண்டிப்பு

327 0

201611210342443386_cut-off-the-head-of-religious-figures-in-egypt-for-2-people_secvpfஈராக், சிரியாவில் ஐ.எஸ். அமைப்பினர், அங்குள்ள சினாய் தீபகற்ப பகுதியில் மத பிரமுகர்கள் 2 பேரின் தலையை துண்டித்து கொடூரமாக கொலை செய்துள்ளனர்.

ஈராக், சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வருகிற ஐ.எஸ். அமைப்பினர், எகிப்திலும் உள்ளனர். அங்குள்ள சினாய் தீபகற்ப பகுதியில் மத பிரமுகர்கள் 2 பேரின் தலையை துண்டித்து அவர்கள் கொடூரமாக கொலை செய்துள்ளனர். ஆனால் இது தொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், சினாய் தீபகற்ப பகுதியில் மத குருக்கள் 2 பேரின் தலையை துண்டித்து கொலை செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
கொலை செய்யப்பட்டவர்கள் மத குருக்கள் அல்ல, மத பிரமுகர்கள் என உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர்.கொலை செய்யப்பட்ட காட்சி அடங்கிய வீடியோ, ஐ.எஸ். அமைப்பினருக்கு ஆதரவானவர்களின் இணையதளத்தில் வெளியாகி உள்ளது.
கொலை செய்யப்பட்டவர்களில் ஒருவர் வயதானவர், வெள்ளை நிற தாடி வைத்து, ஆரஞ்சு நிற ஆடை அணிந்த அவரை கருப்பு நிற உடையும், முகமூடியும் அணிந்த கொலையாளிகள் வெட்டுவதற்கு வாளால் ஓங்குகிற அந்த காட்சி, பதைபதைப்பை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.
அவர் சுபி ஷேக் சுலைமான் அபு ஹெராஸ் என்றும், 2 வாரங்களுக்கு முன் அவர் எல் அரிஷ் என்ற இடத்தில் உள்ள தனது பண்ணையில் இருந்தபோது கடத்திச் செல்லப்பட்டவர் என்றும் தகவல்கள் கூறுகின்றன.தலை துண்டிக்கப்பட்ட மற்றொருவர் ஷேக் சேட் அப்துல் பட்டா, ஒரு மாதத்துக்கு முன்பு கடத்தப்பட்டவர் ஆவார்.