நாட்டில் மீண்டும் ஒரு இனக்கலவரம் – கிழக்கு மாகாண முதல்வர் எச்சரிக்கை

287 0

unnamed-28நாட்டில் பாரிய இனக்கலவரம் ஒன்றை ஏற்படுத்துவதற்கான முன்னேற்பாடுகள் தற்போது அரங்கேற்றப்பட்டு வருவதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்துள்ளார்.

காரைத்தீவு – மாவடிப்பள்ளி பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டுஉரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தற்போது ஆங்காங்கே இடம்பெற்றுவரும் இனவாத செயற்பாடுகள் நாட்டில் பாரிய இனக்கலவரம் ஒன்றை ஏற்படுத்துவதற்கான முன் ஆயத்தங்களாகவே காணப்படுகிறது.

இது குறித்து சிறுபான்மை சமூகத்தினர் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

சிலர் தமது குறுகிய அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக இனக் கலவரங்களை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளனர் எனவும் கிழக்கு மாகாண முதலமைச்சர் குறிப்பிட்டார்.