சுற்றாடல் தினத்தை முன்னிட்டு வவுனியாவில் மரநடுகை

248 0

உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு வவுனியாவில் மரநடுகை நிகழ்வொன்று இன்று (வெள்ளிக்கிழமை) காலை இடம்பெற்றது.

வவுனியா மாவட்ட அரச அதிபர் சமன் பந்துலசேன தலைமையில் மூன்றுமுறிப்பு பொருளாதார மத்திய நிலையத்தில் குறித்த மரநடுகை நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மேலதிக அரச அதிபர் தி.திரேஸ்குமார், வர்த்தகசங்க செயாலாளர் அம்பிகைபாகன், மாவட்டசெயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.