அமரர் ஆறுமுகனின் பூதவுடல் அக்கினியுடன் சங்கமம்

255 0
அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் அக்கினியுடன் சங்கமானது.

அமரர் ஆறுமுகம் தொண்டமானின் பூதவுடலுக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் இறுதி அஞ்சலியை செலுத்தினர்.

அமரர் ஆறுமுகம் தொண்டமானின் பூதவுடல் மதியம் 02 மணிக்கு கொட்டகலையிலிருந்து ஹட்டன், டிக்கோயா வழியாக நோர்வூட் தொண்டமான் விளையாட்டரங்கிற்கு எடுத்து செல்லப்பட்டது.

அங்கு நடைபெற்ற இறுதி அஞ்சலி நிகழ்வினை அடுத்து, பலர் இரங்கல் உரையாற்றினர். இதனையடுத்து, இந்தது சமய முறைப்படி இறுதி சடங்குகள் முன்னெடுக்கப்பட்டன.

இதனையடுத்து, அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் இறுதிக்கிரியைகளை அடுத்து, அக்கினியுடன் சங்கமமாகியது.