அச்சுவேலி பத்தமேனி பகுதியில்மரக்காலைக்கு தீ வைப்பு!

256 0

யாழ்ப்பாணம் – அச்சுவேலி, பத்தமேனி பகுதியில் மரம் அரியும் நிலையத்துக்கு விசமிகள் சிலரால் தீ வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் நேற்று (27) இரவு 9 மணியளவில் நடந்துள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.

இரண்டு மோட்டார் சைக்கிலில் வந்த 4 பேர் கொண்ட குழுவினராலேயே  தீ வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் தடுத்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.