சிறிலங்காவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 1,182 ஆக அதிகரிப்பு

323 0

சிறிலங்காவில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 16 பேர் இன்று மாலை இனங்காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை  1,182 ஆக அதிகரித்துள்ளது.

இன்று மட்டும் 41 தொற்றாளர்கள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், 477 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

கொரோனா தொற்று சந்தேகத்தில் 79 பேர் நாட்டின் பல்வேறு வைத்தியசாலைகளிலும் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன், 695 பேர் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றுக்குள்ளான 10 பேர் இலங்கையில் இதுவரை உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.