கூட்டங்களை நடத்த தொடர்ந்தும் தடை-அஜித் ரோஹன

321 0

சுகாதார வழிமுறைகளை தொடர்ந்து கடைப்பிடிக்கும் அதேவேளை, சமூக இடைவெளியை கட்டாயம் பின்பற்றுமாறு பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் 26 ஆம் திகதி முதல், ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படினும், கூட்டங்களை நடத்த தொடர்ந்தும் தடை விதித்துள்ளதாக, அவர்  தெரிவித்துள்ளார்.

கூட்டங்களில் பங்கேற்குமாறு எவரேனும் அழைப்பு விடுத்தாலும் அதில் பங்குபற்றுவதை தவிர்க்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

அத்துடன், ஒன்றுகூடல்கள் தவிர்த்து சுகாதார ஆலோசனைகளை முறையாக பின்பற்றுமாறு அவர் தெரிவித்துள்ளார்.