சிறிலங்காவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 1060ஆக அதிகரிப்பு

293 0

சிறிலங்காவில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஐவர் இன்று (வெள்ளிக்கிழமை) இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இன்று இரவு 8 மணி நிலவரப்படி நாட்டில் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,060 ஆக அதிகரித்துள்ளது.

தொற்றுக்குள்ளான 430 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதுடன், கொரோனா தொற்றுக்குள்ளான 620 பேர் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

நோய்த்தொற்று சந்தேகத்தில் 110 பேர் நாடாளாவிய ரீதியில் 29 வைத்தியசாலைகளில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன், 9 பேர் இதுவரை உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.