தமிழ்நாட்டு மீனவர்கள் காயத்திற்கும் இலங்கைக் கடற்படைக்கும் தொடர்பில்லை- இந்திய வெளிவிவகார அமைச்சு

315 0

sushma-swarajகடற்றொழிலில் ஈடுபட்டிருந்த சந்தர்ப்பத்தில் இரண்டு தமிழ் நாட்டு மீனவர்கள் காயமடைந்த சம்பவம் தொடர்பில் இலங்கை கடற்படை தொடர்புப்பட்டுள்ளமைக்கான சாட்சியங்கள் எதுவும் கிடையாது என இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இரண்டு தமிழக மீனவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த சந்தர்ப்பத்தில் இலங்கை கடற்படையினர் அவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் நடாத்தியிருந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

இந்த சம்பவம் தொடர்பில் விசேட விசாரணையொன்று முன்னெடுக்கப்பட்டதாக  இந்திய வெளிவிவகார அமைச்சு அறிக்கையொன்றின் மூலம் தெரிவித்துள்ளது.

இந்த விசாரணையின் ஊடாக இலங்கை கடற்படை இந்த சம்பவத்துடன் தொடர்புப்படவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இந்திய வெளிவிவகார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது