புத்தூரில் மலசல கூட குழியில் சிசுவின் சடலம்; தாய் கைது!

310 0

யாழ்ப்பாணம் – புத்தூர் கிழக்கில் நான்கு நாட்களான சிசுவின் சடலம் ஒன்று மலசல கூட குழியில் இருந்து இன்று (20) மாலை கண்டுபிடிப்பு.

துர்நாற்றம் வீசுவதாக பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் இந்த சிசுவின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் குறித்த சிசுவின் தாயாரான 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நீதிபதியின் விசாரணையின் பின்னர் நாளை (21) சிசுவின் சடலத்தை மீட்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.