சென்னை உணவகத்தில் ‘டிரம்ப் தோசை’ அறிமுகம்

290 0

201611181641059530_donald-trump-dosa-now-introduce-in-chennai_secvpfஅமெரிக்க அதிபராகப் பதவியேற்கவுள்ள டொனால்ட் டிரம்ப் பெயரில் சென்னையில் உள்ள உணவகம் ஒன்று தோசையை அறிமுகம் செய்துள்ளது.

சமீபத்தில் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்ற டொனால்ட் டிரம்ப் அடுத்த ஆண்டு ஜனவரி 20-ம் தேதி அமெரிக்க அதிபராகப் பதவியேற்கவுள்ளார்.

டிரம்பின் வெற்றியை அவரின் ஆதரவாளர்கள் கொண்டாடி வரும் வேளையில் சென்னையில் உள்ள உணவகம் ஒன்று டொனால்ட் டிரம்ப் பெயரில் தோசை ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

சென்னை ராமாபுரத்தில் ‘சுப்ரபா’ என்ற பெயரில் உணவகம் நடத்தி வரும் முகுந்த் தாஸ் என்பவர் தனது உணவகத்தின் வெளியே, அமெரிக்க தேர்தலில் வெற்றி பெற்ற டிரம்பின் வெற்றியை கொண்டாடும் வகையில் டிரம்ப் தோசையை அறிமுகப்படுத்தியுள்ளதாக பேனர் வைத்திருக்கிறார்.

சட்னி, சாம்பார், நெய் மற்றும் ஒரு கப் வெண்ணெயுடன் முறுகலாக வாழையிலையில் பரிமாறப்படும் தோசையின் விலை 50 ரூபாய். தற்பொழுது நாளொன்றுக்கு 130 தோசைகள் விற்பனையாவதாக தெரிவிக்கும் முகுந்த் தாஸ் “ஒரு ஓவியக் கலைஞராக இருந்தால் அவருக்குப் பிடித்தவர்களை வரைந்து மரியாதை செலுத்துவார்கள். நான் உணவக உரிமையாளர் என்பதால் எனக்கு பிடித்த டிரம்ப் பெயரை இந்த தோசைக்கு வைத்துள்ளேன்” என்றார்.