யாழ் மாவட்டத்தில் 135,113 குடும்பங்களுக்கு கொடுப்பனவு

296 0

யாழ்ப்பாண மாவட்டத்தில் வதியும் 135,113 குடும்பங்களுக்கு முதல் கட்டமாக 5,000 ரூபா உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் க. மகேஸ்வரன் தெரிவித்தார்.

இவ் உதவித்தொகை 76,032 சமுர்த்தி பயனாளிகள், 11,000 சமுர்த்தி உதவி பெற காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்கள், 39,473 தொழிலற்றவர்கள் மற்றும் 8,608 மேன்முறையீடுகள் மூலம் இணைக்கப்பட்டோர் உள்ள குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

மேலும் முதற்கட்டமாக உதவித்தொகை பெற்ற அனைவருக்கும் இரண்டாம் கட்ட உதவித் தொகை நேற்று (18) தொடக்கம் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை பிரதேச செயலங்கள் ஊடாக வழங்கப்படுமென கூறினார்.