குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் மங்கள

313 0

முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர, குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார்.

இன்று (19), குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு அழைக்கப்பட்ட நிலையில், அவர் அங்கு சென்றுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலின்போது, இலங்கை போக்குவரத்து சபை பஸ் மூலம் வாக்காளர்களை மன்னாருக்கு அழைத்துச் செல்வதற்காக நிதி வசதிகளை ஏற்படுத்தியமை தொடர்பில், வாக்குமூலம் ஒன்றை பெற்றுக்கொள்வதற்கு மங்கள சமரவீர, குற்றப் புலனாய்வு பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில், முன்னதாக, கடந்த வாரம் (14) அவர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகி வாக்குமூலம் வழங்கியிருந்தார்.