மக்கள் பிரதிதிகள் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் பங்கெடுக்க சென்றதை தடுத்தமையை ஏற்றுக்கெள்ள முடியாது!

277 0

மக்கள் பிரதிதிகள் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் பங்கெடுக்க ;சென்றதை தடுத்தமையை ஏற்றுக்கெள்ள முடியாது மனிதாபிமான நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெறவேண்டும் என்பதே, எமது வேண்டுகோள் என இலங்கை தமிழரசு கட்சி தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

தெல்லிப்பளையில் தமிழரசுக்கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வு தமிழரசுக்கட்சியின் வாலிபர் முன்னணியின் யாழ்.மாவட்டத் தலைவர் பிருந்தாபன் தலைமையில் நடைபேற்றது. அங்கு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும் அவர் உரையாற்றுகையில்

மக்கள் பிரதிநிதியாக இருந்த சி.வி.விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உட்பட்ட மக்கள் பிரதிநிதிகள் முள்ளிவாய்க்கால்நினைவேந்தல் நிகழ்வில் பங்கெடுக்கச் சென்றமையை தடுத்தமையை ஏற்றுக்கொள்ள முடியாது, அவர்களை தனிமைப்படுத்த முயற்சித்தமையையும் ஏற்றுக் கொள்ள முடியாது.

இறுதிப்போரில் உயிரிழந்த மக்களை நினைவுகூருவதற்கான நினைவேந்தல் நிகழ்வு முள்ளிவாய்க்காலில் நடைபெற்றிருந்தது, நிகழ்வில் கலந்துகொள்வதற்காக சென்ற முன்னாள் முதலைமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், சித்தார்த்தன் மற்றும் பல மக்கள் பிரதிதிகள் இராணுவத்தினரின் சோதனை நிலையங்களில் வைத்து திருப்பி அனுப்பப்பட்டிருந்தனர்.

மக்கள் பிரதிநிதிகள் நினைவேந்தலுக்காக சென்றதை தடுத்ததை ஏற்றுக்கொள்ளமுடியாது. மனிதாபிமான நிகழ்வுகளை செய்வதற்கு அனுமதிக்கவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

உலகத்தில் இல்லாத நடவடிக்கைகள் இலங்கையில் இடம்பெறுகின்றது. சர்வதேசம் முழுவதும் கொரோனா தாக்கத்தில் உள்ள நிலையில் இலங்கையில் யுத்த கொண்டாட்டத்தில் ஈடுபடவுள்ளது.

ஆனால் இன விடுதலைக்காக பலியானவர்களை நினைவு கூர தடை எற்படுத்தப்படுகின்றது. இதனை ஏற்க முடியாது என்றால் நிகழ்வில் தமிழரசுக்கட்சியின் முக்கியஸ்தர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் கஜதீபன் மற்றும் அரசியல் பிரமுகர்களும் பங்குகொண்டிருந்தனர்.