சிறிலங்காவில் புதையல் தோண்டுவதற்காக வெட்டப்பட்ட குழியில் தவறி விழுந்து 2 சிறுமிகள் பலி

757 0

சிறிலங்காவில்  பக்கமுன, அத்தரகல்லேவ பிரதேசத்தில் புதையல் தோண்டுவதற்காக வெட்டப்பட்ட குழியில் தவறி விழுந்து 2 சிறுமிகள் உயிரிழந்துள்ளனர்.

3 மற்றும் 7 வயதான இரண்டு சிறுமிகளே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

வீட்டின் பின்புறத்தில் தோண்டப்பட்டிருந்த குழியல் நீர் நிரம்பி காணப்பட்ட நிலையில் குறித்த இரு சிறுமிகளும் அதில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக பக்கமுன பொலிஸார் தெரிவித்தனர்.

சடலங்கள் பக்கமுன வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்று (18) பிரேத பரிசோதனைகள் இடம்பெறவுள்ளன.

சம்பவம் தொடர்பில் பக்கமுன பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.