மலையக மக்களுக்கான இந்திய வீட்டு திட்டம்-மனோ

363 0

“மலையக தோட்டப் பகுதிகளில் முன்னெடுக்கப்படும் இந்திய உதவி வீடமைப்பு திட்டம் எந்தவித சிக்கலும் இல்லாமல் சீராக நடைபெற வேண்டும். பல வருடங்களாக நின்று போய் இருந்த அந்த திட்டத்தை 2015க்கு பிறகு ஆரம்பித்து முன்னெடுத்த கட்சி என்ற முறையில் உங்களுக்கு இது தொடர்பான முழுமையான ஒத்துழைப்பை தமிழ் முற்போக்கு கூட்டணி எப்போதும் வழங்கும்.”

இவ்வாறு இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபாலிடம் முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.

அதில் மேலும்,

அதிகார பகிர்வின் ஒரே நடைமுறை ஊன்றுக்கோளாக இருக்கின்ற மாகாண சபை மற்றும் 13ம் திருத்தம், உள்ளிட்ட தேசிய இனப்பிரச்சினை தீர்வு தொடர்பிலும் இந்தியக் கரிசனை தொடர வேண்டும்.

நீங்கள் இலங்கை வந்த உடனேயே உங்களை தொடர்பு கொண்டு நான் உரையாடினேன். இப்போது அதிகாரபூர்வாக, இலங்கை ஜனாதிபதியிடம் உங்கள் பதவி ஆவணங்களை சமர்பித்ததையடுத்து, நீங்கள் பாரத நாட்டின் புதிய உயர் ஸ்தானிகராக பதவியேற்றுள்ளீர்கள். இந்நிலையில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் சார்பாகவும் இந்நாட்டு மலையக மற்றும் ஒட்டுமொத்த தமிழ் மக்கள் சார்பாகவும் உங்களை வாழ்த்தி வரவேற்கின்றேன்.

பல வருடங்களாக இந்திய வீடமைப்பு திட்டம் நின்று போயிருந்தது. எமது ஆட்சி அமைக்கப்பட்டவுடன், குடியிருப்பாளர்களுக்கு நில உரிமையை வழங்க நாம் அமைச்சரவை அனுமதியை பெற்றோம். இந்திய வீடமைப்பு திட்டம் தொடர்பில் முன்னாள் இந்திய தூதுவருடன், எமது கூட்டணியின் பிரதிதலைவர் பழனி திகாம்பரம் உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திட்டார்.

கடந்த காலங்களில் இருந்த முறையற்ற அரசியல் தலையீடுகளை தவிர்த்து, நாம் மலையகத்தில் தோட்ட தொழிலாளர்களை கிராமவாசிகளாக மாற்றும் புதிய கிராமங்களை இந்திய வீடமைப்பு திட்டம் மூலம் ஆரம்பித்து நடத்தினோம். இது தொடர வேண்டும். இதற்கான எமது ஒத்துழைப்பு இந்திய அரசாங்கத்துக்கு எப்போதும் உண்டு.  என்றார்.