மே 16ம் நாள் முள்ளிவாய்க்கால்!

361 0

மே 16ம் நாள் முள்ளிவாய்க்கால்!
********
பதுங்கி இருந்த பாதுகாப்பின் குழியெல்லாம்
பலருக்கங்கே புதைகுழி என்றே போயாச்சே!
வதங்கி வாடிய உயிரின் கூட்டு உருவெல்லாம்
காற்று மோதத் தரையில் வீழும் நிலையாச்சே!

கால்கள் எட்டி வைக்கும் அடிகள் இடமெல்லாம்
ஈரச் சதைகள் எங்கும் கிடக்கும் நிலமாச்சே!
பாவப் பட்ட இனமாய் அங்கே நாமெல்லம்
பார்வை எட்டா திசைகள் என்றே விடலாச்சே!

பையில் கொஞ்சப் பொருளை ஏந்திப் பசியோடே
மனவேதனையின் மக்கள் கூட்டம் எனவாச்சே!
கையில் எட்டா உறவை விட்டு வலியோடே
உடல்கள் எத்தும் கரையோரத்தில் வரலாச்சே!

யார் கண்டார்? யார் கேட்டார்?

-வன்னியூர் குரூஸ்-