இந்தியாவில் கொரோனா பாதிப்பு 90 ஆயிரத்தை கடந்தது

271 0

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 90 ஆயிரத்தை கடந்துள்ளது. பலி 2872 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் நாளுக்குநாள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.
இன்று காலை நிலவரப்படி கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 90 ஆயிரத்தை கடந்து 90,927 ஆக உயர்ந்தள்ளது.
பலியானோரின் எண்ணிக்கை 2752-ல் இருந்து 2872 ஆக உயர்ந்துள்ளது. 34,109 பேர் குணமடைந்துள்ளனர்.  53,946  பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 4,987 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 120 பேர் உயிரிழந்துள்ளனர்.