நாகை, தூத்துக்குடி, காரைக்கால் துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

286 0

ஆம்பன் புயல் அதிதீவிர புயலாக மாறிவருவதால் நாகை, தூத்துக்குடி, காரைக்கால் துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது, தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று ஆமபன் புயலாக மாறியுள்ளது.
ஆம்பன் புயல் வடமேற்கு திசையில் 6 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. அதிதீவிர புயலாக மாற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நாகை, காரைக்கால், தூத்துக்குடி துறைமுகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
ஆம்பன் புயல் வரும் 20-ந்தேதி மேற்குவங்காளம் மற்றும் ஒடிசா அருகே நகரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மேற்கு வங்காளம் – வங்காளத்தேசத்தை ஒட்டிய கடற்பகுதியில் கரையை கடக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.