மே பதின்மூன்றாம் நாள் நினைவதில் முள்ளிவாய்க்கால்!

311 0

மே பதின்மூன்றாம் நாள் நினைவதில் முள்ளிவாய்க்கால்!
********
எங்குதான் போனாலும் ஆண்டுபல ஆனாலும்
முன்புபோல் வீரத்தில் புதியதோர் பலங்கொண்டு
பெடிகள் மீட்பரெனும் பெரு நம்பிக்கையில்
பெட்டிகள் படுக்கையோடு பெரும்பயணம் போனார்கள்!

தண்ணீர் குடித்துத் தாகம் தணித்தங்கே
பட்டிணி கிடந்தாலும் பெடியளைப் பேசாது
தண்ணீர்க் கரைநோக்கிக் கண்ணீரும் குருதியும்
கலந்த பயணத்தில் கூடவே போனார்கள்!

உலர்வாகும் நாள்தோறும் புதுவாழ்வு கண்டமக்கள்
படும்பாடு தனைக்கண்டு தாங்காது தாம்வருந்தி
நெடும்போரில் களம்புகுந்து போராடிப் புலிவீரர்
பெருந்தாகக் கனவோடே மாவீரர் ஆயினரே!

இது முள்ளிவாய்க்கால்
மே மாத நினைவதில்.
-வன்னியூர் குரூஸ்-