மக்களின் உயிர்களை துச்சமாக மதித்து செயற்பட வேண்டாம்

395 0

தேர்தலை நடத்த வேண்டும் என்பதற்காக நாட்டு மக்களின் உயிர்களை துச்சமாக மதித்து செயற்பட வேண்டாம் என முன்னாள் எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்தை கேட்டுக்கொண்டுள்ளார்.

நாட்டில் வழமையான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டாலும் பொது போக்குவரத்து சேவைகளை நடத்த வேண்டாம் என சுகாதார தரப்பினர் போக்குவரத்து அமைச்சிடம் தெரிவித்துள்ளதாக அவர் கூறினார்.

இதேவேளை தேசிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும், வைத்தியர்கள் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் நேற்று (10) சந்திப்பு ஒன்றும் இடம்பெற்றுள்ளது.