மே பதினோராம் நாளதில் முள்ளிவாய்க்கால்!

331 0

மே பதினோராம் நாளதில்
முள்ளிவாய்க்கால்!
**********

கண்ணெட்டும் தூரத்தில் கண்கெட்ட ராணுவம்..
துன்பத்தின் கணைகொண்டு துப்பாகி ரவைகொண்டும்
எண்ணற்ற உறவுகளை எண்ணாது வதம் செய்ய…

அண்ணனின் தம்பியர் ஆணைதனையேற்று அரணாக நின்று
ஆற்றினர் அருஞ்செயல் பார்த்தோம்!

முள்ளிவாய்க்கால் வரை வந்து இன்றும் இயங்கும்
முதியோர் இல்லத்து மூதாளர் முதற்கொண்டு…
அள்ளிக் கொடுத்து அனாதைச் சொல்லகற்றி
அன்பால் வளர்த்த செல்வங்களோடு அனைவருக்கும்..

எட்டும் அலைகடலில் எறிந்த வலையிழுத்து
கத்தும் குடல்களுக்கோ கறிமீனாய் கொடுத்தார்கள்…

குண்டுக்கோ இரையாகி உயிர்போனால் போகட்டும்
கொண்ட பசியோடு அதுபோதல் ஆகாதென..
கொள்கையும் பண்பும் மாறாத செயல் வீரர் ஆற்றினர் அருஞ்செயல்
பார்த்தோம்.

இது மே பதினோராம் நாளதில்
முள்ளிவாய்க்கால்.

-வன்னியூர் குரூஸ்-