முள்ளிவாய்க்கால் நினைவலைகள்!

449 0

முள்ளிவாய்க்கால்
நினைவலைகள்!
*******
இலங்கை முப்படையினரும் உலக வல்லரசுகளும் இணைந்தனர்….
முள்ளிவாய்க்கால் கடற்கரை மணலில்
மூர்க்கத்தனமான தாக்குதல்களை மேற்கொண்டனர்….

அலறிஅடித்து அங்கும் இங்கும்
அம்மா அம்மா ஐயோ ஐயோ என்று
கூக்குரல் இட்டவர்களை கொன்றொழித்தனர்….

கொன்றொழித்தவர்களும் அன்று அதற்கு முண்டு கொடுத்தோரும் இன்று
கொரோனொ என்னும் கொடிய நோயால்
திணறுகின்றனர்…

முள்ளிவாய்க்காலில் இருந்து விண்ணுலகம்
சென்றவர்களின் சாபமா?

ஆட்சியில் இருந்தவர்களும் சர்வதேசமும் முள்ளிவாய்க்காலில் மனிதநேயத்தை
முற்றாக மறைத்தார்கள் மறுத்தார்கள்…

முள்ளிவாய்க்காலில் மொட்டுக்கள் பூக்காமல் கருகியது…
பூக்கள் பிஞ்சுகளாகமல் பஞ்சாகப் பறந்தது..
பிஞ்சுகள் காய்களாகமல் கண்டதுண்டமாகியது…
காய்கள் பழங்களாகமல் சிதறியது…
பழங்கள் பாழாய்ப் போனது!

முள்ளிவாய்க்கால் மறையவும் இல்லை
மறையவும் மாட்டாது….
உயிருடன் இணைந்தது உன்னதமான
இலட்சியமாம் தமிழ் ஈழம்…

உன்னதமான ஈடு இணையற்றவர்
உயிரையும் துச்சமென எண்ணியவர்
முப்படைகளையும் அமைத்தவர்_நமது
நாயகன் தன்னிகரில்லா தலைவன்!

வல்வெட்டித்துறையில் உதித்தவர்
வல்லமை பொருந்தியவர்
ஆரம்பித்த போராட்டம் இன்று மெளனம்!
தாரக மந்திரம் தமிழ் ஈழம் என்றும் மெளனம் அல்ல…
முள்ளிவாய்க்கால் முடிவுமல்ல.

– வி.ரி. கதிர்காமநாதன்-
கிசிலிங்கவுசன்- யேர்மனி